Magizhnthu kalikooru - மகிழ்ந்து களிகூரு


Credits :

Song : Magizhnthu kalikooru
Lyrics, Tune & Sung by : Father S. J. Berchmans
Album : Jebathotta Jeyageethangal VOL - 25

Lyrics :

மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்.

தேவவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
கொஞ்சத்தைப் கண்டு குழம்பாதே
கொடுப்பார் உண்டு கொண்டாடு

அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு safe guard
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

மீனின் வயிற்றில் யோனா போல்
கூனிக் குறுகிப் போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணையாக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்
-------------

Video link :

To watch this song on YouTube. Click here